நெல்லை கோர்ட்டுக்கு 100 கம்ப்யூட்டர்கள்
நெல்லை: நீதிமன்ற தகவல்களை உடனுக்குடன் பெற அனைத்து நீதிமன்றங்களும் கம்ப்யூட்டர் மயமாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்ட கோர்ட்டுக்கு 100 கம்ப்யூட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நீதிமன்றங்களில் விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு கம்ப்யூடடர் வசதியை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட் முழுவதும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டது. இதனால் தகவல்களை பெறுவது எளிதாக்கப்பட்டது.
இதேபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், சப் கோர்ட்டுகள், முன்சிப் கோர்ட்களிலும் கம்ப்யூட்டர் மூலமே தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.
முதல்கட்டமாக நீதிபதிகளுக்கு 3 மாத கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கப்பட்டு லேப்டாப் கம்ப்யூட்டரும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஸ்டேனோ, டைப்பிஸ்டுகளுக்கும் தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை ஓருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வாளகத்தில் உரி்மையியல் மற்றும் குற்றவியல் சப் கோர்ட் என 20 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு நீதிமன்றத்துக்கு 5 கம்ப்யூட்டர் வீதம் நிறுவப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக அனைத்து நீதிமன்றம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் மின்சார இணைப்பு கொடுக்கும் பணி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அனைத்து நீதிமன்ற தகவல்களை பெறவும், அனுப்பவும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற கட்டிடங்களில் குளிரூட்டப்பட்ட ஓருங்கிணைந்த கம்ப்யூட்டர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக நீதிமன்றங்களுக்கு தேவையான 100 கம்ப்யூட்டர்கள் நெல்லை நீதிமன்றத்துக்கு வந்துள்ளன. இதுபோல் மாவட்டத்தில் உள்ள ஏனைய நீதிமன்றங்களான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி, ஆகிய நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications