14 நாள் பரோலில் வந்த பிரவீன் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரமோத் மகாஜன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் பிரவீன் மகாஜன், 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக முன்னணித் தலைவரான பிரமோத் மகாஜன் தன் சகோதரர் பிரவீன் மகாஜனால், கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2007 டிசம்பரில் பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து நாசிக் மத்திய சிறையில் பிரவீன் மகாஜன் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், இன்று சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார் பிரவீன் மகாஜன். மருத்துவ காரணங்களுக்காக அவர் 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகாஜன் குடும்பத்தினர் கூறினர்.












Click it and Unblock the Notifications