முதலிரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை: பெரும் சோகத்தில் புதுப் பெண்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் கல்யாணமான முதல் நாள் இரவில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இதனால் புதுப் பெண் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கினார்.

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (29). சென்னை நந்தனத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார்.

இவருக்கும், சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கும் நேற்று காலை ஏற்காட்டில் கல்யாணம் நடந்தது. பின்னர் புது ஜோடி, பூர்ணிமா வீட்டிற்கு சென்றது. அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.

இன்று காலை பூர்ணிமா கண் விழித்து எழுந்தபோது தாமோதரன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக காணப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா அலறினார்.

உறவினர்கள் ஓடி வந்து பார்த்து அலறினர். பின்னர் தாமோதரன் வீட்டினருக்குத் தகவல் போய் அவர்கள் ஓடி வந்தனர். அனைவருக்கும் தாமோதரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் ஐ லவ் யூ பூர்ணிமா, ஐ ஏம் சாரி என்று டைப் அடித்து வைத்துள்ளார் தாமோதரன்.

இந்த சம்பவத்தால் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+