பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு முஷாரஃப் தான் காரணம்- நவாஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு பர்வேஸ் முஷாரஃப் தான் காரணம் என்று முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரிஃப் குற்றம்சாட்டினார்.
பெஷாவரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்த நவாஸ் ஷெரிஃப், 'ஒரு சர்வாதிகாரியின் சட்டவிரோதமான, அரசியல் அமைப்புக்கு எதிரான ஆட்சி நடந்தபோது, மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது' என்று கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், 'முஷாரஃபின் 10 ஆண்டுகால முறையற்ற ஆட்சி தான், இப்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம். தேசிய விவகாரங்களில் நாட்டின் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது அந்த ராணுவ ஆட்சியில் தான் நடந்தது' என குறி்ப்பிட்டார்.












Click it and Unblock the Notifications