ரோசய்யாவே முதல்வராக தொடருவார் - சோனியா அறிவிப்பு
டெல்லி: ஆந்திர மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக ரோசய்யாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இதையடுத்து ரோசய்யாவே முதல்வர் பதவியில் நீடிப்பது தெளிவாகி விட்டது.
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தது குறித்து கூட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட வீரப்ப மொய்லி சோனியா காந்தியிடம் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று ரோசய்யாவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமித்து அறிவித்தார்.
இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், சட்டமன்ற கட்சித் தலைவராக ரோசய்யாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார் என்றார்.
இதன் மூலம் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி கிடையாது என்பது உறுதியாகி விட்டது. விரைவில் அவர் மத்திய அமைச்சராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications