வைகுண்ட ஏகாதசி விழா - ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை !
திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்.
இந்த கோவிலுக்குள் டிசம்பர் 17-ம் தேதி முதல் ஜனவரி 7 -ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகின்றது.
இதில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா டிசம்பர் 28-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கல்து கொள்வார்கள். அதே போன்று இந்த வருடமும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கோவில் நிர்வாகம் தயாராகிவருகின்றது.
இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளான, பாதுகாப்பு, போக்குவரத்து, மருத்துவம், போன்றவற்றை செய்து தருவது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முக்கியமாக, செல்போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திய காலம் போய் தற்போது, அதன் மூலம் வெடிகுண்டுகள் இயக்கவும் பயன்படுத்தப்படுவதால் இந்த ஆண்டு முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்து.












Click it and Unblock the Notifications