சென்னை ரயில்வே அலுவலகத்தை சூறையாடிய ஊழியர்கள்!
சென்னை: சென்னை அயனாவரம் ரயில் பெட்டி பழுது பார்க்கும் பணிமனை ஊழியர்கள் இன்று திடீர் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். ரயில்வே அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
சென்னை அயனாவரம் ரயில் பெட்டி பழுது பார்க்கும் பணிமனையில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு பதவி மற்றும் பணி செய்யும் நேரத்திற்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந் நிலையில் பணிமனையின் மேலாளர் சியாந்தா ராம் எடுத்த சி்க்கன நடவடிக்கை காரணமாக இந்த ஊக்கத் தொகை குறைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
கடந்த 2ம் தேதி இந்த ஊழியர்கள் அனைவரும் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதையடு்த்து அவர்களுக்கு அதிகாரிகள், ஆப்சென்ட் போட்டனர்.
இதனால் அதிகாரிகள் மீது ஊழியர்கள் கடும் எரிச்சலில் இருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் மேலாளர் அலுவலகத்துக்கு வெளியே கூடி நின்று கோஷமிட்டனர்.
திடீரென உள்ளே நுழைந்த அவர்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஜன்னல்கள், மேஜை, நாற்காலிகள் சேதம் உடைத்து நொறுக்கப்பட்டன.
அலுவலகத்தில் இருந்த பொருட்களை வெளியே வீசினர். மேலும் மேலாளரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வந்தனர். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த அளவே இருந்ததால் அவர்களால் வன்முறையில் ஈடுபட்ட ஊழியர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இதைத் தொடர்ந்து மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்தது தென்னக ரயிலேவே தொழிற் சங்க (எஸ்.ஆர்.எம்.யூ.) பொதுச் செயலாளர் கண்ணையா, தெற்கு ரயில்வே எஸ்.சி.எஸ்.டி. தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன், டி.ஆர்.இ.யு. சங்க பொதுச் செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் விரைந்து வந்து ஊழியர்களை அமைதிப்படுத்தினர்.
பின்னர் மேலாளர் சியாந்தா ராம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதில் சமரசம் ஏற்பட்டது.
ஊக்கத்தொகை குறைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மேலும் கடந்த 2ம் தேதி ஊழியர்களுக்கு போடப்பட்ட ஆப்சென்ட்டை விடுமுறையாக அங்கீகரிக்கவும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து ஊழியர்களின் திடீர் வன்முறை முடிவுக்கு வந்தது.
-
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்!












Click it and Unblock the Notifications