இழுக்கு தேடித் தரும் இளங்கோவன்-நெடுமாறன் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Pala.Nedumaran
சென்னை: பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி.சம்பத்தின் நற்பெயருக்கும் இளங்கோவன் இழுக்கு தேடி தந்து கொண்டிருக்கிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும், சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வன்மையாக கண்டிக்கிறேன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றமல்ல என மாவட்ட நீதிமன்றஙகள் முதல் உச்சநீதிமன்றம் வரை பல தீர்ப்புகள் வழங்கிய பிறகும் அவற்றை சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்ட இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்தவர் ஆவார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இளங்கோவன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தமிழ் நாட்டில் தோற்கடிக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் தலைமை செய்த தவறும் அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கோபமுமே காரணமாகும்.

இதைக் கொஞ்சமும் உணராது இளங்கோவன் போன்றவர்களின் செயற்பாடு தமிழகத்தில் காங்கிரசை ஆழக்குழி தோண்டி புதைத்துவிடும் என எச்சரிக்கிறேன்.

பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் தமிழ்நாட்டில் அரசியல் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி.சம்பத்தின் நற்பெயருக்கும் இளங்கோவனின் செயல் பெரும் இழுக்கைத் தேடி தந்துவிட்டது என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+