For Daily Alerts
Just In
சீனா எதிர்ப்பு-சாலை பணியை கைவிட்ட இந்தியா
டெல்லி: இமாலயத்தின் லே பகுதியி்ல் இந்திய அரசின் சாலை அமைக்கும் பணிக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் அந்தப் பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டுவிட்டது தெரியவந்துள்ளது.தென் கிழக்கு லடாக் பகுதியில் டெம்சோக் என்ற இடத்தில் இந்திய எல்லைக்கு உள்ளே 8 கி.மீ. சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால், இந்தப் பணிக்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் பணியை காஷ்மீர் அரசு பாதியில் கைவிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவுவது மிக வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, November 30, 2009, 15:05 [IST]