தமிழகத்தில் பரவலாக மழை-2 நாளில் அதிகரிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

Satellite image of Tamil Nadu
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தி்ல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை, சீர்காழியில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

பரங்கிப்பேட்டை, காரைக்கால், திருத்துறைப்பூண்டி, தரங்கம்பாடியில் தலா 3 செமீ, சிதம்பரம், முத்துப்பேட்டை, கொள்ளிடம், மயிலாடுதுறை, வேதாரண்யம் தலா 2, காட்டுமன்னார் கோவில், சேத்தியாத்தோப்பு, மதுக்கூரில் தலா ஒரு செமீ மழை பெய்துள்ளது.

2ம் தேதி காலை வரையிலான காலகட்டத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

வங்க கடலில் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேற்கு - வடக்கு நோக்கி நோக்கி நகருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+