காடுவெட்டி பேச்சால் தோற்ற பாமக-சுப.இளவரசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வன்னியர்களுக்கு பாமக செய்த துரோகத்தாலும், காடுவெட்டி குருவின் பேச்சாலும் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி தோல்வியை தழுவியது என்று தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுப.இளவரசன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசு நடத்த இருக்கும் தமிழர் செம்மொழி மாநாட்டை வரவேற்கிறோம். அந்த மாநாட்டில் தமிழர் நீதிக்கட்சியினர் பங்கேற்பர்.

கட்சியின் அரியலூர்- கடலூர் மாவட்ட மாநாடு டிசம்பர் 30ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க தமிழர் நீதிக்கட்சி முடிவு செய்துள்ளது.

ஈரோட்டில் பிரபாகரன் படத்துடன் இருந்த பேனரை முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அகற்றியது தவறு. அதே நேரத்தில் சென்னையில் உள்ள இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் தவறு.

வன்னியர்களுக்கு செய்த துரோகத்தாலும், காடுவெட்டி குருவின் பேச்சாலும் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வியை தழுவியது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+