பெண்ணாகரம் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் மரணம்

தர்மபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த அவர் சில காலமாக புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.
பெண்ணாகரம் தாலுகா அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம்பட்டி தான் அவரது சொந்த ஊராகும். இறுதிச் சடங்குகள் சொந்த ஊரில் நாளை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தர்மபுரி மாவட்ட பாமக பிரமுகர்களில் முக்கியமானவராக திகழ்ந்த பெரியண்ணன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். பின்னர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பெரியண்ணன் பதவியில் இருக்கும்போதே இறந்த 6வது எம்எல்ஏ ஆவார்.
இதற்கு முன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் (திமுக, மதுரை மத்திய தொகுதி), எஸ்.வி.சண்முகம் (அதிமுக, மதுரை மேற்கு தொகுதி), வீர.இளவரசன் (மதிமுக, மதுரை திருமங்கலம்), ஊர்வசி செல்வராஜ் (காங்கிரஸ், ஸ்ரீவைகுண்டம்), எஸ்.பி.ஜெயராமன் (திமுக, வந்தவாசி) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
பெரியண்ணனின் மறைவால் சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 ஆகக் குறைந்துள்ளது.
மறைந்த பெரியண்ணனின் உடலுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள், கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பெரியண்ணன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கரூர் மாவட்ட கழகத்தின் செயலாளராக அரும் பணியாற்றிய சகோதரி வாசுகி முருகேசன் மறைந்த துக்கம் மறைவதற்குள் இதோ மற்றொரு அதிர்ச்சி செய்தியாக தர்மபுரி (வடக்கு) மாவட்ட கழகத்தின் செயலாளரும், பெண்ணாகரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தம்பி பி.என். பெரியண்ணன் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது.
ஒரு சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் தேறாமல் நம்மைவிட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அடக்கமும், அமைதியும் வாய்ந்தவர். எதற்கும் எதிர்த்து பேசமாட்டார். கழகத் தோழர்களிடம் அன்பாக பழகி அனைவரையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்துக்கும், கழகத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
பெரியண்ணன் காலமானதையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக கொடிகள் 3 நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்கும் என்று நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications