சட்ட வாரிய மாஜி தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்-ரூ.85 லட்சம் சிக்கியது
டெல்லி: கம்பெனி சட்ட வாரிய முன்னாள் தற்காலிக தலைவர் வாசுதேவன் வீட்டிலிருந்து ரூ. 85 லட்சம் பணத்தை சிபிஐ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த சென்னை வீடு தவிர டெல்லியில் உள்ள வீட்டையும் சேர்த்து இதுவரை இரு வீடுகளிலிருந்தும் ரூ. 1.4 கோடி பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி வீட்டில் ரூ. 55 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நவம்பர் 23ம் தேதி வாசுதேவன், மனோஜ் பந்தியா என்ற கம்பெனி செயலாளரிடமிருந்து ரூ. 7 லட்சம் லஞ்சத்தை தனது டெல்லி வீட்டில் வைத்து பெற்றபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார். பந்தியாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தவிர உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆங்குர் சாவ்லா என்பவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்பட 7 இடங்களில் இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது.
கம்பெனி சட்ட வாரிய முன்னாள் தற்காலிக தலைவரான வாசுதேவன் தற்போது வாரிய உறுப்பினராக உள்ளார். இவரது வீடுகள், வங்கிக் கணக்குகளில் நடந்த சோதனைகளில் பெருமளவில் பணம் சிக்கியது. மூன்று வங்கி லாக்கர்களிலிருந்து மட்டும் ரூ. 85.33 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. நான்காவது லாக்கர் இன்னும் திறக்கப்படவில்லை.
இதுதவிர ரூ. 6 முதல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 10-12 கிலோ வெள்ளி நகைகள், 450 கிராம் தங்க நகைகளும் சிக்கியுள்ளன.
இதுதவிர ரூ. 6.9 லட்சம் நிரந்தர வைப்பு திட்ட ஆவணங்கள், 12 வங்கிக் கணக்கு பாஸ்புக்குகளும் சிக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications