போட்டியின்றி எம்எல்ஏ ஆகிறார் ஒய்எஸ்ஆர் மனைவி
Subscribe to Oneindia Tamil

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்கு பிறகு, அவரது தொகுதியான புலிவெந்தலாவில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராஜசேகரரெட்டி மனைவி விஜயலட்சுமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
ஆனால், அவரை எதிர்த்து தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லோக் சத்தா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
புலிவெந்தலா இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மதியம் வரை விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications