கூவத்தை சீராக்க 'சென்னை நதிநீர் ஆணையம்'

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூவம் ஆற்றை சீரமைத்தல், வானூர்தி தொழிற்பூங்கா மற்றும் நிதி நகரம் ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சென்று அந் நாட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்த விவரங்களை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
அப்போது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, தொழிற்துறை முதன்மைச் செயலாளர் பரூக்கி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்வரின் செயலாளர் தீனபந்து, கூவம் நதி நிர்வாக அலுவலர் பணீந்திர ரெட்டி, கூவம் நதி நிர்வாக பொறியாளர் காந்திமதி நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமாகவுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றியும், அவற்றை எவ்வாறு களைவது என்பது பற்றியும், சிங்கப்பூர் நதியைப் போலவே கூவத்தையும் மாற்றியமைத்திட தேவையான நடவடிக்கைகள் பற்றியும் அப்போது ஸ்டாலின் விளக்கினார்.
கூவம் உற்பத்தியாகும் இடமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியிலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை மொத்தம் 65 கி.மீ. நீளத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முதல்வர் கருணாநிதி கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கூவம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற நதிகளின் சீரமைப்புத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு முதற்கட்டமாக 'சென்னை நதிநீர் ஆணையம்" என்ற தனி அமைப்பினை துணை முதல்வர் தலைமையில் ஏற்படுத்துவதென் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அமைப்பில் குடிசை மாற்று வாரியம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.
இந்தக் குழு உடனடியாக அமைக்கப்படுவதோடு உடனடியாக கூவம் சீரமைப்புப் பணிகளை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம்












Click it and Unblock the Notifications