For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு முழுதும் பரவும் தேவநாதனின் அசிங்க லீலை சிடி!

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: காஞ்சிபுரம் கோவில் கருவறையில் ஒரு பெண்ணுடன் அர்ச்சகர் தேவநாதன் செய்த காம லீலைக் காட்சிகள் அடங்கிய சிடி தற்போது காஞ்சிபுரத்தைத் தாண்டி தமிழகம் முழுவவதும் உலா வர ஆரம்பித்துள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள மச்சேஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவிலின் கருவறையை ஓட்டிய மாடப்பள்ளியில் வைத்து சாமி கும்பிட வரும் பெண்களிடம் வயது வித்தியாசமின்றி காம களியாட்டம் ஆடும் காட்சி அடங்கிய வீடியோ சிடிக்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இந்த சிடிக்கள் பெருமளவில் விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையிலும் இது உலா வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் தற்போது நெல்லையிலும் இந்த சிடிக்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.

இந்த காமகளியட்ட காட்சிகள் தற்போது நெல்லை மாவட்டம் முழுவதும் செல்போன்கள் மூலம் பரவி வருகிறது.

Temple_Imp என்ற பெயரில் உலா வரு்ம் இந்த வீடியோ 10 நிமிடம் ஓடுகிறது. இதில், நீல நிற சேலை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கோவில் கருவறையில் தேவநாதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வெளியில் யாரும் வருகிறார்களா என்று பார்க்கிறார் தேவநாதன்.

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், உள்ளே நுழைந்து செக்ஸ் லீலைகளில் ஈடுபடுகிறார். அவரது ஜாக்கெட்டை கழற்றுவதில் ஆரம்பித்து மகா அசிங்கமான செயல்களை செய்கிறார்.

அப்போது யாரோ வர அசிங்கத்தில் ஈடுபட்ட கையோடு, இடையிடையே, பக்தர்கள் வரும்போது, அப்படியே சென்று தீபஆராதனை தட்டை கையில் ஏந்தி, சூடம் ஏற்றுகிறார். விபூதி பிரசாதங்களை பக்தர்களுக்கு கொடுத்த பி்ன், மீண்டும் அந்த பெண்ணுடன் லீலைகள் புரிகிறார். அவ்வப்போது இருவருக்கும் இடையில் கொஞ்சல், சிணுங்கல், ஊடல் என பலவிதமாக காட்சிகள் நீள்கின்றன.

சாதாரண செக்ஸ் லீலைகளைத் தாண்டி அந்த வக்கிரத்திலும் ஈடுபடுகிறார். பின்னர் அந்தப் பெண் வெளியேறுகிறார். எல்லாம் முடிந்து கோவில் கருவறைக்குள்ளேயே ஆணுறையைக் கழற்றிப் போடுகிறார் தேவநாதன்.

(இங்கே வெளியாகியுள்ள படங்கள் தான் அந்த சிடியில் உள்ளதில் கொஞ்சமாவது டீசண்டானவை. அந்தப் பெண்ணின் நலன் கருதி அவரது முகத்தை வெளியிடவில்லை.)

அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு:

தற்போது வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் தேவனாதனை ஜாமீனில் எடுக்க அவரின் வக்கீல் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு காஞ்சிபுரம் முதல்வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த போலீசார், அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனால், ஜாமீன் மனுவை அர்ச்சகரின் வக்கீல் வாபஸ் பெற்றுக்கொண்டார். செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X