இந்தியாவில் ஸ்வைன் பலி 604 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை தரப்பில் கூறுகையில், ராஜஸ்தானில் 3 பேரும், குஜராத்தில் ஒருவரும் புதிதாக பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துளளனர். இவர்களையும் சேர்த்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 228 பேரும், கர்நாடகாவில் 123 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 57, ஆந்திராவில் 50, குஜராத்தில் 47, கேரளாவில் 26, டெல்லியில் 25 பேரும் இறந்துளளனர்.
புதிதாக 290 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 141 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications