மக்களவை தேர்தலில் திமுக-காங். 1,200 கோடி செலவு: வைகோ
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து பேசிய அவர்
அக்கிரமக்காரர்களை தட்டிக்கேட்கும் தொகுதியாக திருச்செந்தூர் அமையும்.
கிராமங்களில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதிகாலை 4 மணி வரை காவல் துறை துணையுடன் ஒவ்வொரு வீடு வீடாக பால் பாக்கெட் போடுவதைப் போல் கவர்களை போட்டு செல்கின்றனர். இந்த கலாச்சாரம் நாட்டிற்க்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும்.
கொள்கையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அதில் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து ரூ.1,200 கோடி செலவு செய்துள்ளன. இந்த பணம் எல்லாம் ஊழல் பணம் தான்.
அதையும் மீறி 12 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசமும் குறைவு தான்
வாக்காளர்கள் பணம் வாங்குவதை நான் குறை சொல்லவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. அதனால் தேர்தல் நேரங்களில் கொடுக்கப்படும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் குடும்பத்தில் உள்ள சில பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.
1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் அவர்கள் கையில் உள்ளது. ஊழல் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல்.
அவர்கள் தரும் பணம் கட்சிப் பணம் அல்ல. உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து வாக்காளர்களை விலைபேசி அதன் மூலம் மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளையடிப்பதற்காக செய்யப்படும் சதி திட்டத்திற்கு பொது மக்கள் பலியாகி விடக்கூடாது என்றார்.