அமைச்சர்களுக்கு நரேஷ் குப்தா எச்சரிக்கை
திருச்செந்தூர்: தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அனிதா பிரசாரம் செய்தபோது அப் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் அருகே நின்றிருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அதிமுக இளைஞர் பேரவைச் செயலாளர்
தாமோதரன், அதிமுக வார்டு செயலர் கே.கே.அரசகுரு, சுரேஷ்குமார், முருகேசன், சிவப்பிரகாசம் ஆகிய 5 பேரும் தாக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் தாமோதரன் புகார் அளித்தார். அதன்பேரில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திமுக நகரச் செயலாளர் கா.மு.சுரேஷ் அளித்த புகாரின்பேரில் அதிமுகவினர் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு குப்தா எச்சரிக்கை:
இந் நிலையில் போலீஸ் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,இரு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்யும் சில அமைச்சர்கள், சுழலும் சிவப்பு விளக்கு பொருத்திய கார் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் செல்வதாக தகவல்கள் வந்துள்ளன. இது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, எந்த அமைச்சரும் தங்களது வாகனத்தில் சைரனுடன், எவ்வித சுழலும் விளக்கும் பொருத்தியிருக்கக் கூடாது.
எனவே, இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு,
திரு வண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இதை பின்பற்றத் தவறினால், இவ்விஷயம் பற்றி தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வந்தவாசிக்கு சிறப்பு காவல் படை:
வந்தவாசியில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, சிறப்பு காவல் படை வந்திறங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியிலிருந்து, 5 உயர் அதிகாரிகளைக் கொண்ட 85 சிறப்பு காவல் படையினர், வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து மேலும் பல சிறப்பு காவல் படையினரும் வரவுள்ளனர்.
இங்குள்ள 217 வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என மாவட்ட எஸ்.பி. மோ.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இடைத் தேர்தலுக்காக வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்படுவர்.
மத்திய காவல் படைகள் 6 கம்பெனி அனுப்பி
வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
457 துப்பாக்கிகள் ஒப்படைப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பாதுகாவலர்கள் திருச்செந்தூர் இடைத் தேர்தல் முடியும் வரை தங்கள் துப்பாக்கிகளை ஓப்படைக்கும் வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற 507 பேரில் 457 பேர் தங்களது துப்பாக்கிகளை தங்களது பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
மீதமுள்ள உரிமங்களில் 40க்கும் மேல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் உள்ளது என்பதால் அதனை உரிய அனுமதியின் பேரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
திமுகவினர்தான் தேர்தல் விதிமுறையை மீறியுள்ளனர்.
தேர்தல் விதிமுறையை மீறி வந்தவாசி தொகுதியில் புதிய சாலை அமைக்கபடுகிறது. இது எல்லாம் தேர்தல் விதி மீறல்கள் இல்லையா? என்றார்.
-
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு!












Click it and Unblock the Notifications