Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்களுக்கு நரேஷ் குப்தா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: ‌தே‌ர்​த‌ல் பிர​ச‌ா​ர‌த்​தி‌ல் ஏ‌ற்​ப‌ட்ட ‌மோத‌ல் ‌தொட‌ர்​ப‌ாக திமுக ‌வே‌ட்​ப‌ா​ள‌ர் அனித‌ா ர‌ாத‌ா​கி​ரு‌ஷ்​ண‌ன் மீது வழ‌க்​கு‌ப் பதிவு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.​

ஞ‌ாயி‌ற்​று‌க்​கி​ழ‌மை தூ‌த்​து‌க்​குடி ம‌ாவ‌ட்​ட‌ம் ஆறு​மு​க​‌னே​ரி​யி‌ல் அனிதா பிர​ச‌ா​ர‌ம் ‌செ‌ய்தபோது அ‌ப் பகு​தி​யி‌ல் அதி​முக ‌தே‌ர்​த‌ல் அலு​வ​ல​க‌ம் அரு‌கே நி‌ன்​றி​ரு‌ந்த அதி​மு​க​வி​ன​ரு‌க்​கு‌ம்,​​ திமு​க​வி​ன​ரு‌க்​கு‌ம் இ‌டை‌யே ‌மோத‌ல் ஏ‌ற்​ப‌ட்​டது.​

இதி‌ல் அதி​முக இ‌ளை​ஞ‌ர் ‌பேர​‌வை‌ச் ‌செய​ல‌ாளர்
த‌ா‌மோ​த​ரன்,​​ அதி​முக வ‌ா‌ர்டு ‌செய​ல‌ர் ‌கே.‌கே.அர​ச​குரு,​​ சு‌ரே‌ஷ்​கு​ம‌ா‌ர், முரு​‌கே​ச‌ன்,​​ சிவ‌ப்​பி​ர​க‌ா​ச‌ம் ஆகிய 5 ‌பேரு‌ம் த‌ா‌க்​க‌ப்​ப‌ட்​ட​ன​ர்.

இது​‌தொ​ட‌ர்​ப‌ாக ஆறு​மு​க​‌னேரி க‌ாவ‌ல் நி‌லை​ய‌த்​தி‌ல் த‌ா‌மோ​த​ர‌ன் புக‌ா‌ர் அளி‌த்​த‌ா‌ர்.​ அத‌ன்​‌பே​ரி‌ல்,​​ அனித‌ா ர‌ாத‌ா​கி​ரு‌ஷ்​ண‌ன் ம‌ற்​று‌ம் அவ​ரது ஆத​ர​வ‌ா​ள‌ர்​க‌ள் மீது வழ‌க்கு பதிவு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டுள்ளது.​

மேலும் திமுக நகரச் ‌செய​ல‌ாளர் க‌ா.மு.சு‌ரே‌ஷ் அளி‌த்த புக‌ா​ரி‌ன்​‌பே​ரி‌ல் அதி​மு​க​வி​ன‌ர் 12 ‌பே‌ர் மீது‌ம் வழ‌க்கு பதிவு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டுள்ளது.​

அமைச்சர்களுக்கு குப்தா எச்சரிக்கை:

இந் நிலையில் போலீஸ் டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி, இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,இரு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்யும் சில அமைச்சர்கள், சுழலும் சிவப்பு விளக்கு பொருத்திய கார் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் செல்வதாக தகவல்கள் வந்துள்ளன. இது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது.

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, எந்த அமைச்சரும் தங்களது வாகனத்தில் சைரனுடன், எவ்வித சுழலும் விளக்கும் பொருத்தியிருக்கக் கூடாது.

எனவே, இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு,
திரு வண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இதை பின்பற்றத் தவறினால், இவ்விஷயம் பற்றி தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வந்தவாசிக்கு சிறப்பு காவல் படை:

வந்தவாசியில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, சிறப்பு காவல் படை வந்திறங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியிலிருந்து, 5 உயர் அதிகாரிகளைக் கொண்ட 85 சிறப்பு காவல் படையினர், வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து மேலும் பல சிறப்பு காவல் படையினரும் வரவுள்ளனர்.

இங்குள்ள 217 வாக்​குச் சாவ​டி​க​ளி​லும் துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​ப​டும் என மாவட்ட எஸ்.பி. மோ.பாண்​டி​யன் தெரி​வித்​துள்​ளார்.

மேலும் இடைத் தேர்​த​லுக்​காக வேலூர்,​ காஞ்​சி​பு​ரம் மாவட்​டங்​க​ளில் இருந்​தும் போலீ​ஸார் வர​வ​ழைக்​கப்​ப​டு​வர்.
மத்​திய காவல் படை​கள் 6 கம்​பெனி அனுப்பி
வைக்​கப்​ப​டும் என எதிர்​பார்க்​கி​றோம் என்றார்.

457 துப்பாக்கிகள் ஒப்படைப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பாதுகாவலர்கள் திருச்செந்தூர் இடைத் தேர்தல் முடியும் வரை தங்கள் துப்பாக்கிகளை ஓப்படைக்கும் வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற 507 பேரில் 457 பேர் தங்களது துப்பாக்கிகளை தங்களது பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

மீதமுள்ள உரிமங்களில் 40க்கும் மேல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் உள்ளது என்பதால் அதனை உரிய அனுமதியின் பேரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.


திமுகவினர்தான் தேர்தல் விதிமுறையை மீறியுள்ளனர்.

தேர்தல் விதிமுறையை மீறி வந்தவாசி தொகுதியில் புதிய சாலை அமைக்கபடுகிறது. இது எல்லாம் தேர்தல் விதி மீறல்கள் இல்லையா? என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+