விலைவாசி உயர்வு-சோனியா பெரும் கவலை
டெல்லி: விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையாக உள்ளது. இதுகுறித்து நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசி எனது கவலையைத் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாளான காங்கிரஸ் சந்தேஷில் அவர் எழுதியுள்ளதாவது...
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்னை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நான் மட்டுமல்ல அரசுக்கும் கூட இது பெரும் கவலையாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக நான் தனிப்பட்ட முறையில், பிரதமருடனும், நிதியமைச்சருடனும் பேசியுள்ளேன். விலைவாசியைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தாங்கள் முயன்று வருவதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
பருவ மழை தவறியதே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். பருவ மழை தவறியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டியது இந்த தருணத்தில் முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார் சோனியா.












Click it and Unblock the Notifications