Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

26/11: ஹெட்லி மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டுப் பதிவு

Subscribe to Oneindia Tamil

US court charges Headley
சிகாகோ: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவராக, சிகாகோ கோர்ட்டில், பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பான சதித் திட்டத்தில் தொடர்புடையவராக ஹெட்லி குறித்த குற்றச்சாட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிகாகோவில் உள்ள பெடரல் கோர்ட்டில் இந்த குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான இடங்கள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு சதித் திட்டத்திற்கு உடந்தையாக ஹெட்லி இருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தாக்குதலுக்கு முன்பு, கிட்டத்தட் 2 ஆண்டுகள் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 குற்றச்சாட்டுக்கள் ஹெட்லி மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தியா, டென்மார்க்கில் குண்டு வைக்க சதி செய்தது, இந்தியா, டென்மார்க்கில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது, வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களின் சதிச் செயலுக்கு உதவியது, லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தகவல்கள் கொடுத்து உதவி செய்தது ஆகிய ஆறு குற்றச்சாட்டுகளும், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக கொலை மற்றும் சதிச் செயலில் ஈடுபட உதவியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஹெட்லி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களில் பங்கேற்றவர் என்றும் எப்.பி.ஐ தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக இவர் அதில் கலந்து கொணடு வருவதாகவும், அந்த அமைப்பினருடன் இணைந்து இந்தியா, டென்மார்க்கில் சதி வேலைகளை நிகழ்த்த சதி வேலைகளைச் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்துல் ரஹ்மான் ஹஷீம் சையத் என்பவர் மீதும் குற்றச்சாட்ட்பட்டுள்ளது. இவர் முகம்மது நபியின் கார்ட்டூனை வெளியிட்ட டென்மார்க் நாளிதழ் அலுவலகத்தைத் தாக்க திட்டம் தீட்டியதாக கூறப்பட்டுள்ளது.

டென்மார்க் அலுவலகத்தை எப்படித் தாக்கலாம் என்பது குறித்தும், தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்ட இடம் குறித்த தகவல்களையும், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலியாஸ் காஷ்மீரி ஆகியோருடன் சேர்ந்து மேற்கொண்டதாக இவர் மீதான குற்றச்சாட்டு கூறுகிறது.

ஹெட்லியும், பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கடந்த மாதம் சிகாகோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ஆயுள் அல்லது மரண தண்டனை கிடைக்கும்...

ஹெட்லி மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை ஆகிய இரண்டில் ஒன்று நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க நாட்டின் சட்டப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுவது அல்லது தீவிரவாத சதிக்கு உடந்தையாக இருப்பது ஆகிய இரண்டுமே மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

தற்போது ஹெட்லி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. இதை வைத்துப் பார்க்கும்போது அவருக்கு குறைந்தது ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.

மேலும், சதித் திட்டத்திற்கு ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றை அளித்து உதவியதற்கு மட்டும் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+