மும்பை தாக்குதல்: பாக. ராணுவ அதிகாரிக்கு தொடர்பு- யுஎஸ்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிக்கியுள்ள பயங்கரவாதி ஹெட்லி மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளோடு, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் எஃப்.பி.ஐ அம்பலப்படுத்தியுள்ளது.
26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஹெட்லி மற்றும் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஹெட்லி-ராணாவுக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறை தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. லாகூரைச் சேர்ந்த ஒய்வுபெற்ற மேஜர் அப்துல் ரஹ்மான் ஹாசிம் சயிது (எ) பாஷா பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர்.
ஹெட்லி மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதல் மற்றும் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது சிகாகோ கோர்ட்டில் எஃப்.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிக பயங்கரஸ சக்தி வாய்ந்த தீவிரவாதியாக கருதப்படும் ஹூஜி தலைவர் இலியாஸ் கஷ்மீரி, லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தாக மேஜர் சயிது மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு இந்த சயிதுடன் முக்கிய தொடர்பு இருப்பதையும் எஃப்.பி.ஐ குற்றப்பத்திறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் வெளியே சில இடங்களில் தீவிரவாத சதிச் செயலுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயிது, பல்வேறு சதித் திட்டங்களுக்கும் ஹெட்லிக்கு உடந்தையாக செயல்பட்டிருப்பதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் ஹெட்லிக்கும் இடையே பாலமாக இவர் இருந்துள்ளார். ஹெட்லி பாகிஸ்தான் சென்றபோது, தீவிரவாத அமைப்புகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்களின் தொலைபேசி மற்றும் இ-மெயில் உரையாடல்களின் பதிவையும் எஃப்.பி.ஐ ஆதாரமாக வைத்துள்ளது. இப்படிப்பட்ட அந்த மாஜி ராணுவ அதிகாரியை பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து பின்னர் விடுவி்த்தது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications