கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சூடான பூமி: ஐ.நா

Subscribe to Oneindia Tamil

Earth on Fire
கோபன்ஹேகன்: இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பத்து ஆண்டுகள்தான் அதிக வெப்பமான காலமாக இருப்பதாக ஐ.நா.வின் உலக தட்பவெப்பவியல் கழகம் தெரிவித்துள்ளது.

கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில்தான் உலக மக்கள் அதிக வெப்ப நிலையை சந்தித்து வருவதாக இந்த கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் இதில் அடக்கம் என்கிறது அக்கழகம்.

இதுகுறித்து இக்கழகத்தின் செயலாளர் மிச்சல் ஜெராட் கோபன்ஹேகனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2000மாவது ஆண்டு முதல் தற்போதைய ஆண்டு வரை உலகின் வெப்பம் அதிகரித்துள்ளது. 90களில் இருந்ததை விட இந்த கால கட்டத்தில்தான் அதிக வெப்ப நிலை நிலவியது, நிலவிக் கொண்டுள்ளது. 80 களை விட தற்போதைய வெப்ப நிலை அதிகமாகும்.

1850ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை பதிவான வெப்ப நிலையைக் கணக்கிட்டால், 2009ம் ஆண்டுதான் ஐந்தாவது அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக உருவெடுத்துள்ளது.

உலகின் கடற்பரப்பு மற்றும் நிலப்பரப்பில் காற்றின் வெப்ப நிலை 2009ம் ஆண்டில் (ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டம்) 0.44 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. இது 1961ம் ஆண்டில் இருந்ததை விட அதிகமாகும் என்றார் ஜெராட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+