For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரித் பிரதேச மாநிலம் அமைக்க அஜீத் சிங் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Ajit singh
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளைப் பிரித்து ஹரித் பிரதேசம் என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்கப்போவதாக ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனி மாநில கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் அஜித் சிங் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹரித் பிரதேசம் தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்பது மக்கள் ஏற்றுக் கொண்ட விஷயம் மட்டுமல்ல. ராகுல்காந்தியே இதை ஏற்றுக் கொண்டார்.

மத்திய அரசு இதுகுறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்' என்றார்.

தனி மாநில கோரிக்கைகள் குறைந்தது ஒன்பது மாநிலங்களிலாவது ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X