பொய் வழக்கு விவகாரம்: போலீஸ், வக்கீல் மோதல்
கரூர்: வழக்கு தொடர்பாக புகார் அளித்தவரை கோர்ட்டில் ஆஜர்படுத்து அழைத்து வந்த போது, போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டடு, மோதலானது.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே ஒரு சிலர் காரில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகின்றது. அவர்கள் 'விஐபிக்கள்' என்று கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பெண் எஸ்ஐ ஒருவர், அவர்களின் பின்புலம் தெரியாமல், சாலையில் வைத்து மது அருந்துவதை கண்டித்துள்ளர்.
இதன் காரணமாக அந்த நபர்களுக்கும், பெண் எஸ்.ஐ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண் எஸ்.ஐ.யிடம் அந்த நபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க விரும்பாத போலீஸ், வேறு ஒரு நபரிடம் பொய் புகார் வாங்கி வழிப்பறி செய்ததாக அந்த முக்கியஸ்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது புகார் கொடுத்த நபரை தங்கள் கஸ்டடியில் வைக்க போலீசாருக்கும், விஐபிக்கள் தரப்பு வக்கீல்கள் சிலருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது.
இதனையடுத்து வழிப்பறி செய்ததாக கூறி வழக்கில் சிக்கியவர்களை நீதிபதி தனது சொந்த ஜாமீனில் வெளியே விட்டார். அத்தோடு அமளி அடங்கியது.