For Daily Alerts
Just In
மும்பை தாக்குதலில் ஹெட்லி, ராணா தொடர்பு - 'விசாரணை 6 வாரத்தில் முடியும்'
டெல்லி: மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஹெட்லி, ராணாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்தி வரும் விசாரணை 4 முதல் 6 வாரத்திற்குள் முடிவடையும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டேவிட் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோருக்கு, மும்பை தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது. இன்னும் 4 முதல் 6 வாரத்திற்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஹெட்லி குறித்த தகவல்களை எப்.பி.ஐ அமைப்பு இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்றார் பிள்ளை.
Comments
Story first published: Thursday, December 10, 2009, 15:17 [IST]