வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்-நெய்​வே​லி​யில் சுரங்​க பணிகள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

Satellite View
கட​லூர்& சென்னை: தொடர் மழை கார​ண​மாக கட​லூர்,​​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் 40,000 ஏக்​கர் நெற்​ ப​யிர்​கள் நீரில் மூழ்​கியுள்ளன.​

வார்ட் புயல் உரு​வா​னது முதல் கட​லூர் மாவட்​டத்​தில் 7வது நாளாக கன​மழை பெய்து வருகிறது.

முக்கிய ஏரி​கள் நிரம்பி வழி​கின்​றன.​ வீரா​ணம் ஏரி​யின் நீர் மட்டம் 46.3 அடி​யாக உயர்ந்​துள்ளது.​ இதன் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டுள்ளதால் ஏரி​யைக் காப்​பாற்​ற பெருமளவில் நீர் வெளி​யேற்​றப்பட்​டு வருகிறது.

இந்த நீர் 20க்கும் மேற்​பட்ட கிரா​மங்​க​ளில் புகுந்​து நெல் பயிர்களை மூழ்கடித்துள்ளது.

பொங்​கல் பண்​டி​கையின்போது அறு​வ​டைக்கு வரும் இந்த நெற் ​ப​யிர்​ கதிர்​கள் பால் பிடிக்​கும் நிலை​யில் நீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

மேலும் பல பகுதிகளில் 110 நாட்களுக்கு முன் பயிரிடப்பட்ட சம்பா நெற் பயிர்களும் கன​மழை கார​ண​மாக பெரும் சேதமடைந்துள்ளன.

இது தவிர ஏராளமான பரப்பில் பயிரிடப்பட்ட கரும்பு பயிரும் வெள்ளத்தால் சாய்ந்து விழும் நிலை​யில் உள்ளன.

அதே போல விழுப்​பு​ரம் மாவட்​டத்​தில் 10,000 ஏக்​கர் நெற்​ ப​யிர்​கள் நீரில் மூழ்​கியுள்ளன. மேலும் அ​று​வ​டைக்​கு தயா​ராக உள்ள கரும்பு பயிர்​களும், மணிலா பயிர்​க​ளும் நீரில் மூழ்​கி​யுள்​ளன.​

இன்​றும் பலத்த மழை:

இந் நிலையில் தமி​ழ​கத்​தின் கட​லோர மாவட்​டங்​கள் மற்​றும் புது​வை​யில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.

வங்​கக் கட​லில் உரு​வான வார்ட் புயல் வலு​வி​ழந்து,​​ தற்​போது குறைந்த காற்​ற​ழுத்த தாழ்வு நிலை​யாக தமிழகம் முழுவதும் வியாபித்துள்ளது.

இதனால் மேகமூட்டமான சூழல் நிலவுவதோடு அவ்வப்போது மிக பலத்த மழை பெய்து வருகிறது.

மன்​னார் வளை​குடா பகு​தி​யில் இருந்து தெற்கு ஆந்​திர கரை​யோ​ரப் பகுதி வரை நீண்டு பர​வி​யுள்​ இந்த தாழ்வு நிலையால் அடுத்த 24 மணி நேரத்​துக்கு சென்னை,​​ கட​லூர்,​​ திரு​வள்​ளூர்,​​ திரு​வா​ரூர்,​​ நாகப்​பட்​டி​னம்,​​ ராம​நா​த​பு​ரம்,​​ புதுக்​கோட்டை,​​ தூத்​துக்​குடி,​​ திரு​நெல்வேலி,​​ கன்​னி​யா​கு​மரி
உள்​ளிட்ட கட​லோர மாவட்டங்​க​ளி​லும்,​​ புதுச்​சே​ரி​யி​லும் பெரும்​பா​லான இடங்​க​ளில் இடி,​​ மின்​ன​லு​டன் கூடிய ​ பலத்த மழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

கட​லோ​ரப் பகு​தி​க​ளில் மணிக்கு 55 ​கிமீ வேகத்​தில் பலத்த ​காற்று வீசக்கூடும். எனி​னும் மீன​வர்​க​ளுக்ள் கடலுக்குள் செல்ல தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

ஆனாலும் பெரும்பாலான மீன​வர்​கள் இன்றும் கட​லுக்​கு செல்​ல​வில்லை.​கட​லில் அலை​கள் பெரிய அள​வில் எழுவதால் கட​லோர கிராம மக்​கள் அச்​சத்​தில் உள்​ள​னர்.​

நெய்​வே​லி​யில் சுரங்​க பணிகள் பாதிப்பு:

தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.​

நெய்​வே​லி​யில் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் 3 திறந்​த​வெளி பழுப்பு நிலக்​கரி சுரங்​கங்​க​ளும்,​​ 3 அனல்​மின் நிலை​யங்​க​ளும் இயங்​கி ​வ​ரு​கின்​றன.

கன மழை​யால் திறந்​த​வெளி சுரங்​கங்​க​ளில் பழுப்பு நிலக்​கரி வெட்​ட​மு​டி​யாத சூழல் உரு​வா​கி​யுள்​ளது.​

சுரங்க இயந்​தி​ரங்​கள் ஒரு இடத்தை வேறு இடத்​திற்கு நகர முடி​யாத அள​வுக்கு சுரங்​கத்​தி​னுள் சேறும்,​​ சக​தி​யு​மா​கக் காணப்​ப​டு​வ​தால்,​​ சிறப்பு சுரங்க இயந்​தி​ரங்​க​ளின் இயக்​கம் முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​

சுரங்​கத்​தில் தேங்​கி​யுள்ள நீரை ராட்​சத பம்​பு​க​ளைக் கொண்டு வெளி​யேற்​றும் பணி தீவி​ர​மாக நடந்து வ​ரு​கி​றது.​ இத​னால்,​​ பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் பணி​யும் தடை​பட்​டுள்​ளது.​

இருப்​பி​னும்,​​ சேமிப்​புக் கிடங்​கு​க​ளில் உள்ள பழுப்பு நிலக்​க​ரியை பயன்​ப​டுத்தி மின் உற்​பத்தி தொடர்ந்து
நடை​பெற்​று​ வ​ரு​வ​தால் மின்தடைக்கு வாய்ப்பில்லை.

மயி​லா​டு​து​றை​யில் 150 மிமீ மழை:

மாநி​லத்​தி​லேயே அதி​க​பட்​ச​மாக மயி​லா​டு​து​றை​யில் தான் நேற்று 150 மிமீ மழை பெய்​துள்​ளது.​ இதற்கு அடுத்​த​ப​டி​யாக வல்​லத்​தில் 140 மிமீ மழை பெய்​துள்​ளது.​

சென்​னை​யில் கன மழையால் 15க்கும் மேற்​பட்ட இடங்​க​ளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மெரீனா,​​ பெசன்ட் நகர்,​​ திரு​வொற்​றி​யூர்,​​ எண்​ணூர் ஆகிய பகு​தி​க​ளில் தொடர்ந்து கடல் சீற்​றம் அதி​க​மாக உள்ளது.

சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விடாமல் நீடித்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி நிலச்சரிவு நிவாரணம்-கூடுதலாக ரூ.25 கோடி:

இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 25 கோடி நிதியை ஒதுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காகவும், மின்சார அமைப்புகளை செப்பனிடுவதற்காகவும், தோட்டக்கலைத் துறை, நகர பஞ்சாயத்து துறை, குன்னூர் நகராட்சி, உதகமண்டலம் நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றின் மூலம் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+