For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுக்குள் புகுந்து அப்பாவிப் பெண்ணைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீந​கர்:​ ​ஜம்மு காஷ்​மீர் மாநிலம் சோபி​யான் பகுதியில் தீவி​ர​வாதி ஒருவன் வீட்​டுக்​குள் புகுந்து பெண்ணை சுட்​டுக்​கொன்​றான்.

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த முக​மது மக்​பூல் என்​ப​வர் தனது வீட்​டில் மகள்​க​ளு​டன் இரவு உணவு சாப்​பிட்​டுக் ​கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது திடீரென முகமூடியணிந்த ஒருவன் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த பெண்களின் பெயர்களை வரிசையாக கூறுமாறு மிரட்டினான். துப்​பாக்​கி​யு​டன் மிரட்டியதால், தன் மகள்களின் பெயர்களை மக்பூல் வரிசையாக கூறினார்.

ஒரு மக​ளின் பெயரை ஷெர்ஸா அக்​தர் என்று சொன்னபோது, அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த ஆசாமி தப்பியோடி விட்டான். 21 வயதே ஆன ஷெர்ஸா அக்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இந்த வெறிச்செயலை நடத்தியது தீவிரவாத குழுவைச் சேர்ந்தவன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வீட்​டுக்​குள்​ளையே புகுந்து அப்பாவிப் பெண்ணை தீவிரவாதி சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X