உற்சாகத்தோடு கூடி குழப்பம் மற்றும் தோல்வியுடன் முடிந்த கோபன்ஹேகன் மாநாடு

Subscribe to Oneindia Tamil

Copenhagen
கோபன்ஹேகன்: பெரும் உற்சாகத்தோடும், எதிர்பார்ப்போடும் கூடிய கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பேசிக் எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் நிராகரித்து விட்டன.

இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த உருப்படியான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.

கோபன்ஹேகன் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. 192 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் கூடி விவாதித்த இந்த மாநாட்டின் இறுதி நாளில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.

இதற்காக சில வரைவு ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே, குறிப்பாக டென்மார்க் நாடு முன்வைத்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்ததால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா 2 முறையும், சீனா ஒரு முறையும், ஆப்பிரிக்க நாடுகள் ஒரு முறையும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பிரச்சினையைத் தீர்த்து சுமூக நிலையை ஏற்படுத்த பேசிக் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமே மாநாட்டின் ஒப்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் நிராகரித்து விட்டன. இதில் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமான அம்சங்கள் இருப்பதாக அவை கூறி விட்டன.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் மாநாட்டின் ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டால்தான் அது அமலுக்கு வரும் என்பதால் அது நடக்காது என்பது தெளிவாகியுள்ளதால் 2 வாரமாக கோபன்ஹேகனில் நடந்த மாநாடு பெரும் தோல்வி மாநாடாகவே கருதப்படுகிறது.

கோபன்ஹேன் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள், குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளன வளரும் நாடுகள். புவிவெப்ப மாற்ற தடுப்பு நடவடிக்கைளுக்கான கால அட்டவணை இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்பதை அவை கசுட்டிக் காட்டியுள்ளன.

இந்த ஒப்பந்தம், நாஜிகள் நடத்திய இன அழிப்புச் செயலுக்கு சமமானது என்று ஒரு ஆப்பிக்க நாட்டுப் பிரிதிநிதி சற்று கடுமையாகவே வர்ணித்தார்.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் லண்டனில் கூறுகையில், நாம் இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் போதாது என்றார்.

கோபன்ஹேகன் மாநாட்டைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்தியில் மெக்சிகோவில் அடுத்த ஐ.நா. புவிவெப்ப மாநாடு நடைபெறவுள்ளது. அதிலாவது ஏதாவது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் என பல நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

கியூபா, நிகாரகுவா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமானு என்று வர்ணித்துள்ளன.

முன்னதாக சனிக்கிழமை காலை மாநாட்டின் இறுதி நிகழ்வாக அமெரிக்கா மற்றும் பேசிக் கூட்டமைப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மாநாட்டு ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டது.

இதை ஐ.நா. புவிவெப்ப தடுப்பு கோபன்ஹேகன் மாநாட்டுத் தீர்மானமாக அங்கீகரிப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதை அனைவரும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் வந்து விடக் கூடாது என்பதற்காக மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள், இந்த கோபன்ஹேகன் ஒப்பந்தத்தை கவனத்தில் கொண்டதாக அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாநாடு குறித்து மாநாட்டுத் தலைவரும் டென்மார்க் பிரதமருமான ரஸ்முஸன் கூறுகையில், எனக்கு திருப்தியாக உள்ளது. ஒரு முடிவை நாம் சாதித்துள்ளோம். அடுத்து நாடுகள் அதில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகும். அதன் பின்னர் இது அமலுக்கு வரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+