For Daily Alerts
Just In
ராமாவரம் எம்ஜிஆர் வீட்டில் திருட்டு!
எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்று அழைக்கப்படும் இந்த வீட்டில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள், மருமகன் வசித்து வருகின்றனர்.
அவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ராமாபுரம் தோட்டத்தில் யாரும் இல்லை.
இந்நிலையில் நேற்றிரவு ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த பல்வேறு பரிசுப் பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, December 28, 2009, 18:36 [IST]