For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வத்தலக்குண்டில் தேவர் சிலை அவமதிப்பு - நெல்லை சிலைகளுக்குப் பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை பகுதியில் தேவர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று தேவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதையடுத்து தென் மாவட்டங்களில் உள்ள தேவர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சிவகிரி போலீஸ் நிலையத்திற்குற்பட்ட தென்மலை, வடகப்பட்டி. வடக்கு சத்திரம், தேவிபட்டிணம், சிவகிரி உள்ளிட்ட 8 இடங்களில் தேவர் சிலை மற்றும் அம்பேத்கார் சிலைகளுக்கு போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

அதேபோல் மலையடிக்குறிச்சி, தலைவன்கோட்டை, புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே போல் மாவட்டத்தில் உள்ள வீரசிகாமணி, தேவர்குளம், சங்கரன்கோவில், நெல்லை, ஊத்துமலை, சோலைசேரி, மூன்னிர்பள்ளம் பகுதிகளில் உள்ள தேவர் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X