அர்ச்சகர் தேவநாதனுக்கு மீண்டும் ஆண்மைப் பரிசோதனை

மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தேவநாதனை இதுவரை 2 முறை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் அவருடைய பல லீலைகள் அம்பலமாகின. அவர் மீது இதுவரை 2 பெண்கள் கற்பழிப்புப் புகாரைக் கொடுத்துள்ளனர்.
பல விஐபி வீட்டுப் பெண்களுடன் தேவநாதன் அசிங்க வேலைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனால் வெளியில் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறார் தேவநாதன். இதன் காரணமாக ஜாமீன் கோராமல் உள்ளார்.
கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக கூட்டி வரப்பட்ட தேவநாதனுக்கு அங்கு ஆண்மைத்தன்மை சோதனை நடத்தப்பட்டது. பின்னர் வேலூர் சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது மீண்டும் அவருக்கு ஆண்மை சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த வாரத்தில் இந்த சோதனை நடக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications