நிமோனியா- ஜோதிபாசு உடல்நிலையில் முன்னேற்றம்
கொல்கத்தா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறினர்.
95 வயதான முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு நுரையீரல் கோளாறு தொடர்பான நோயால் அவதிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் முந்தைய தினத்தை விட அவரின் உடல்நிலையில் இன்று முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தீபாஷிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 48 மணிநேரத்துக்கு ஜோதிபாசு ஐசியு வார்டில் மருத்துவர்களின் மூழு கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
நுரையீரலில் ஏற்பட்ட வீக்கத்தைத் தவிர மற்ற பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications