பென்னாகரம் இடைத் தேர்தல் புறக்கணிப்பு - பழங்குடியினர் அறிவிப்பு
பென்னாகரம்: பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சமுதாயத்தினர் அறிவித்துள்ளனர்.
தாங்கள் கோரி வரும் சாதிச் சான்றிதழ் இதுநாள் வரை தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.
மலை வாழ் மக்களும், பழங்குடியின மக்களும் சேர்ந்து இந்த புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அரசு வேலைகளில் சேர முடியாத அவல நிலை உள்ளது. எனவே சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை இடைத்தேர்தல் உள்பட எந்தத் தேர்தல் வந்தாலும் அதைப் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் இவர்கள் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அரசியல் கட்சியினர் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல கட்சிகள் இவர்களை மறந்து விட்டன.
இந்த நிலையில் தற்போது இடைத் தேர்தல் புறக்கணிப்பை இந்த மக்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications