பார்வையற்றோர் பணம் எடுக்க 'குரல் ஆணை' ஏடிஎம்கள்!
மும்பை: பார்க்க கண்களிருக்கின்றன, எடுக்க கைகளும் உள்ளன... ஏடிஎம் போய் பின் நம்பர்களைத் தட்டியதும் கொட்டும் பணத்தை எடுத்து வருகிறோம்... இதுவே பார்வையற்ற, உடல் குறைபாடு கொண்டவர்கள் என்ன செய்வார்கள்?
யாரையாவது துணைக்கு அழைத்துப் போய்தான் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுக்க வேண்டும். எப்போதும் நம்பகமான மனிதர்கள், உறவினர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
ஆவர்கள் யார் துணையும் இல்லாமல், தாங்களே ஏடிஎம் மையத்துக்குப் போய், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள முடியாதா...?
முடியும் என்கிறது பாரத ஸ்டேட் வங்கி. அதற்கேற்ப புதிய ஏடிஎம் கருவியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் முதல் அநேகமாக இந்தப் பணி முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு 7000 எஸ்பீஐ ஏடிஎம்களில் பார்வையற்றோர் தங்கள் குரல் ஆணை மூலமே பணத்தைப் பெறலாம்.
மும்பையில் நடந்த சிஐஐ செமினாரில் இதனைத் தெரிவித்தார் இந்த வங்கியின் பொது மேலாளர் (மாற்று வழி) அமிதாப் குமார்.
என்சிஆர் மற்றும் டைபோல்ட் நிறுவனங்கள் இதனை வடிவமைக்கும் பணியில் இறங்கியுள்ளனவாம்.
எஸ்பீஐ பெறும் வெற்றியைப் பொறுத்த மற்ற வணிக வங்கிகளும் தங்கள் ஏடிஎம்களில் இந்த வசதியை செய்யக் கூடும்.












Click it and Unblock the Notifications