கோ-ஆப்டெக்ஸ் பட்டு-10% சிறப்பு தள்ளுபடி

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஜவுளிகளுக்கு ஆண்டு முழுவதும் 20 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 2010 முடிய 139 நாட்களுக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி சேர்த்து மொத்தமாக 30 சதவீதம் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி பருத்தி ஜவுளி ரகங்களுக்கு 30 சதவீதம் அல்லது ரூ.150, இதில் எது குறைவோ அந்தத்தொகை தள்ளுபடியாகவும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 30 சதவீதம் ரூ.300, இதில் எது குறைவோ அந்தத்தொகை அரசு தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டு சேலை விற்பனையை மேம்படுத்தும் வகையில் வருகிற பொங்கல் 2010 பண்டிகை மற்றும் முக்கிய திருமண மாதமான தை திங்களை முன்னிட்டு 12.1.2010 முதல் 31.1.2010 வரையிலான 20 நாட்களுக்கு மட்டும் பட்டு துணி வகைகளுக்கு உச்சவரம்பின்றி 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி விற்பனை செய்ய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும் மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் சிறப்பாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications