பாபநாசம் ஆற்றில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
விகேபுரம்: பாபநாசம் ஆற்றில் மூழ்கி ஆலங்குளத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியானார்கள்.
ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மன். கூலி தொழிலாளி. இவரது மகன் மதன். சேர்மனின் சகோதரர் துரைபாண்டி. இவரது மகள் துளசி. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மதனும், துளசியும் தங்களது பாட்டி மாரியம்மாளுடன் காரையாருக்கு சென்றனர்.
சொரிமுத்து அய்யனார் கோவில் எதிரே தாமிரபரணி ஆற்றில் மதனும், துளசியும் குளித்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இருவரும் பலியாகினர். இருவரின் உடலையும் போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் ஆலங்குளத்துக்கு எடுத்து சென்றனர்.
விகேபுரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் இருவரது உடலையும் உறவினர்கள் மாயனத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் நசீர் அகமதுகான் மற்றும் போலீசார் மாயனத்திற்கு சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications