ஜோதி பாசு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது
கொல்கத்தா: பழம்பெறும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் உடல்நிலை நேற்று நள்ளிரவு முதல் மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து பாசுவின் மகன் சந்தன், மனைவி ராக்கி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறுநீரகம் செயிலிழந்துவிட்ட நிலையில் மற்ற உடல் உறுப்புகளும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நேற்று மாலையில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பாசுவின் நுரையீரல் உட்பட பல்வேறு உடல் உறுப்புகளும் செயலிழந்து அவர் முழுக்கமுழுக்க மருத்துவ உபரணங்களை சார்ந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
'இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம், நுரையீரல், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதயம் மற்றும் கல்லீரல் எந்த நேரத்திலும் செயலிழக்கும் நிலையில் உள்ளது' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவில் மருத்துவக் குழுவினர் ஜோதிபாசுவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்த பின், மிக மிக மோசமான கட்டத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துவிடுமாறு மருத்துவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications