இலங்கை விபச்சாரி கொலை: இந்தியருக்கு சிறை
சிங்கப்பூர்: இலங்கையைச் சேர்ந்த விபச்சாரப் பெண்ணைக் கொலை செய்ததாக 21 வயது இந்திய இளைஞர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடிகளும் தண்டனையாக தரப்பட்டுள்ளது.
அவரது பெயர் மாதுரி ஜெயச்சந்திர ரெட்டி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தக் கொலை நடந்தது.
கடந்த திங்கள்கிழமை இவருக்கான தண்டனையை சிங்கப்பூர் கோர்ட் அறிவித்தது.
கொலை செய்யப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்து வந்தார். அவரைக் கொலை செய்த ரெட்டி, அவரது உடமைகளை எடுத்துக் கொண்டு உலை, ஒரு படுக்கையின் கீழ் ஒளித்து வைத்து விட்டுத் தலைமறைவானார்.
பின்னர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அப்போது அந்தப் பெண் தன்னை போன் மூலம் தொடர்பு கொண்டு செக்ஸுக்கு அழைத்ததாக கூறினார். மேலும், தான் திட்டமிட்டு அப்பெண்ணைக் கொலை செய்யவில்லை என்றும், அப்பெண்தான் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், அதைத் தடுக்க நடந்த முயற்சியில்தான் அப்பெண் உயிரிழந்ததாகவும், தனக்குக் கருணை காட்ட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.












Click it and Unblock the Notifications