களைகட்டியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

திமிறி வரும் காளைகளை அடக்க, தினவெடுத்த தோள் கொண்ட வீரர்கள் உயிர் பயம் சிறிதும் இல்லாமல் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது தொடங்கியுள்ளது. மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும் திரளாக இதைக் காண அங்கு குவிந்துள்ளனர்.
மாடுகளுக்கும், மாடுகளை அடக்கக் களம் இறங்கும் வீரர்களுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்ட பி்ன்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கோர்ட் மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்கேற்ப ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பதற்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications