கள்ளக் காதலியுடன் தகராறு- வாலிபர் குத்திக் கொலை
நெல்லை: கள்ளக்காதலியின் வீட்டில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கண்ணாடித் துண்டால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாரின் மனைவி பார்வதி. செல்வகுமார் இறந்துவிட்டதை அடுத்து பார்வதிக்கு செல்வம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
செல்வம் ரயில்வே டிக்கெட் புரோக்கராக இருந்து வந்தார். பொங்கல் பண்டிகையை ஓட்டி நேற்று குடிபோதையில் இருந்த செல்வம் வழக்கம் போல் பார்வதியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. செல்வம் பார்வதியை தாக்கியதோடு அங்கிருந்த ஷோகேஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
அப்போது சென்னையில் இருந்து பொங்கலுக்காக ஊருக்கு வந்திருந்த பார்வதியின் அண்ணன்களான கிட்டுப்பிள்ளை, பரமசிவன் ஆகியோர் செல்வத்தை கண்டித்தனர். இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கிட்டு பிள்ளையும், பரமசிவனும் செல்வத்தை தாக்கி, அருகில் கிடந்த கண்ணாடியை எடுத்து செல்வத்தின் கழுத்தில் குத்தினர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுதொடர்பாக கிட்டு பிள்ளை, பார்வதி, பரமசிவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications