லட்டு குறைப்பு-திருப்பதில் பக்தர்கள் ரகளை-கவுண்டர் சூறை
திருப்பதி: கூட்ட நெரிசல் காரணமாக லட்டு எண்ணிக்கையை அதிகாரிகள் குறைத்ததால் கோபமடைந்த பக்தர்கள், திருப்பதி கோவில் லட்டு வழங்கும் கவுண்டரைத் தாக்கி சூறையாடினர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பொங்கல் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதியது. மேலும் அய்யப்ப பக்தர்களும் குவிந்ததால் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.
இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தரிசன கியூவும் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு கிடக்கிறது.
இப்படி பெரும் கூட்டம் வந்து விட்டதால் எதிர்பார்த்த அளவுக்கு லட்டு ஸ்டாக் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆளுக்கு ஒரு லட்டு மட்டுமே விநிநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி தரப்பட்டது.
ஆனால் பக்தர்கள் 2 லட்டு தர வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் லட்டு கவுண்டர் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தடுப்பு கம்பிகளையும் பிடுங்கி எறிந்தனர்.
தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications