காஷ்மீர் எல்லையில் சண்டை-தீவிரவாதி சுட்டு கொலை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையில், ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவனது அடையாளத்தை காணும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த துப்பின் அடிப்படையில், நடோலா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
இன்னும் 2 அல்லது 3 தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, 3 தோட்டா மாகசின்கள், ஒரு ரேடியோ செட், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications