சீனாவில் நிலநடுக்கம்- 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதியில் பூகம்பத்தால் மலைச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானார்கள். ஒன்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் குய்ஸூ மாகாணத்தில் உள்ள குவான்லிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 3.4 என பதிவான இந்த நிலநடுக்கம் மலைபகுதியில் உண்டானதால் நிலச்சரிவு ஏற்பட்டது.
இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 பேர் பலியானதாகவும், ஒருவர் காணவில்லை என்றும் அரசுத் தரப்புத் தகவல் தெரிவிக்கிறது.
மேலும் 9க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications