பிரபாகரன் மாமியார் விடுதலை-சிவாஜிலிங்கம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மாமியார் சின்னம்மா விடுவிக்கப்பட்டு அவருடைய உறவினர்களிடம் சிங்கப்பூரில் சேர்ந்துள்ளார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியும், அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுபவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை ராணுவம் விடுவித்தது.
இந் நிலையில் ராணுவத்தின் பிடியில் இருந்த பிரபாகரனின் மாமியார் எரம்பு சின்னம்மாவும் விடுவிக்கப்பட்டு அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து விட்டதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
நேற்று மாலத்தீவுக்கு சென்றிருந்தார் சிவாஜிலிங்கம். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் கூறுகையில், மாலத்தீவில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் எரம்பு சின்னம்மாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தற்போது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவரது பிள்ளைகளுடன் இணைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications