வருகிறது மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு!
நாக்பூர்: மூன்றரை ஆண்டு கல்வி மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்,
மூன்றரை ஆண்டு கால படிப்பு மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் படிப்பு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும்.
மாணவர்கள் இந்தப் படிப்பை படித்து முடித்ததும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யவும் பயிற்சி பெறுவார்கள். ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போதுள்ள டாக்டர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு இந்த திட்டத்தை வகுத்திருக்கிறது.
டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க இப்போதுள்ள அரசு மருத்துவமனைகளில் மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 150 என்பது 250 ஆக உயர்த்தப்படும்.
முதுகலை மருத்துவப் படிப்பில் இப்போது ஒரு மாணவருக்கு மட்டுமே ஆசிரியர் 'கைட்' ஆக இருக்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதி திருத்தப்பட்டு ஒவ்வொரு 'கைடும்' தலா 2 மாணவர்களைத் தன் பொறுப்பில் ஏற்கலாம் என்ற வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதன்மூலம் முதுகலை பட்ட வகுப்பில் பயிலும் மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை இனி இரட்டிப்பாகிவிடும்.
டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியின் தரத்தில் பிற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஆசாத்.
அரசு பள்ளிகளில் எப்படி எம்பிபிஎஸ் படிப்பை சொல்லித் தர முடியும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications