11,500 பேரை நியமிக்கும் டிசிஎஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் முதல் நிலை ஐடி நிறுவனம் டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்- டிசிஎஸ் 2010 இறுதிக்குள் 11,500 பேரை பணியமர்த்துகிறது.

இவர்கள் 8500 பேர் பயிற்சி நிலையிலும், 3000 பேர் லேட்டரல் என்ட்ரி முறையிலும் நியமிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து டிடிஎஸ்ஸின் சர்வதேச மனித வள துணைத் தலைவர் அஜயோந்திர முகர்ஜி கூறுகையில், "2010 மூன்றாம் காலாண்டில் டிசிஎஸ் ஏற்கெனவே 8703 பேரை பயிற்சி அடிப்படையில் நியமித்துள்ளது. 3000 பேரை லேட்ரல் என்ட்ரி முறையில் தேர்வு செய்துள்ளோம்.

இவர்களைத் தவிர, அடுத்த காலாண்டிலேயே கூடுதலாக மேலும் 11500 பேரை நியமிக்க உள்ளோம். இவர்களில் 3000 பேர் லேட்டரல் என்ட்ரி அடிப்படையில் நியமனம் பெறுவார்கள். மீதி 8500 பேருக்கு பயிற்சி முறை நியமனம் தரப்படும்.

இது தவிர அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் மையங்களிலும் பணியாளர் நியமனம் இருக்கும்.

ஐடி துறையில் டிசிஎஸ்ஸின் பங்களிப்பு திருப்திகரமான முறையில் வளர்ந்து வருகிறது. ஐடி சர்வீஸில் 11.5 சதவிகிதமும், பிபிஓ பிரிவில் 10.5 சதவிகிதமும் டிசிஎஸ்ஸின் பங்களிப்பாகும்," என்றார் முகர்ஜி.

நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 32 வாடிக்கையாளர்களை டிசிஎஸ் பெற்றுள்ளது. இவர்களில் 7 வாடிக்கையாளர்கள் 50 லட்சம் டாலருக்கு மேல் கட்டணம் செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+