நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும்..கி.வீரமணி
ஸ்ரீவில்லிபுத்தூர்: முதல்வர்ர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் பெரியார் புத்தக நிலையத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியார் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்வர்ர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆண்டுக்கு 365 நாட்களில் 600 மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம் சாதாரண குடிமகனுக்கும் நல்ல மருத்துவ சிகிச்சை பெற வழி வகுத்துத் தந்துள்ளது.
தற்போது குடிசையில்லா திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது என்பது பாராட்டத்தக்கது. கருணாநிதி தாய் உள்ளத்தோடு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர். அது முந்தைய ஆட்சியிலா? இந்த ஆட்சியிலா? என்பதை அவர்கள் கூற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கு வங்காளத்தை போய் பார்க்க வேண்டும். தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications