மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கொல்லப்பட்டவர்களில் 11 பேர் டீன் ஏஜ் வயதினர். 20 பேர் படுகாயமடைந்தனர். உள்ளே புகுந்த சிலர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
போதைக் கடத்தல் கும்பலுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சியூதாத் நகர் உலகின் மிகவும் அபாயகரமான நகரங்களில் ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட அனைவருமே 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த அரங்கம் போர்க்களம் போலக் காணப்பட்டது. உடல்கள் சிதறிக் கிடந்தன. ரத்தக் கறையாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications