நரேந்திர மோடியை காந்தியோடு ஒப்பிடவில்லை: கத்காரி பல்டி

மகாத்மா காந்தியின் 61வது நினைவு தினத்தையொட்டி கடந்த சனிக்கிழமையன்று குஜராத் சென்ற நிதின் கத்காரி, அங்கு தீனதயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்து வைத்தார்.
காந்திஜியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மணல் சிற்ப கண்காட்சியையும் துவக்கி வைத்து அவர் பேசுகையில், நரேந்திர மோடியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந் நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கத்காரி,
மகாத்மா மற்றும் உபாத்யாயா கொள்கைகளைப் பின்பற்றி குஜராத்தில் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார் மோடி என்று தான் தெரிவித்திருந்தேன். காந்தியுடன் மோடியை நேரடியாக ஒப்பிடவில்லை.
இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நான் மோடியை காந்திக்கு சமமாக பாவித்து பேசியதாக ஊடகங்கள் திரித்துக் கூறியுள்ளன. இதனால் என்னை காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை செய்தியாக கொடுக்க வேண்டும். அதில் ஊடகங்கள் தங்களது கருத்துக்களை கலந்து வெளியிடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications